வெற்றியின் ரகசியம்
டாக்டர். ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி.
ஒருவர் அவரைக் கேட்டார். ''உங்களது வெற்றியின் ரகசியம் என்ன?''
டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் அமைதியாகச் சொன்னார்.
''அது ஒன்றுமில்லை. தினமும் பிராத்தனை செய்யும்போது, எல்லாம் கடவுளின் கருணையைச் சார்ந்தது என்று எண்ணுவேன். ஆனால், என் வேலைகளைச் செய்யும்போது, எல்லாம் என் செயலைச் சார்ந்தது என்று எண்ணியபடி என் வேலையில் ஈடுபடுவேன்.இதுதான ரகசியம்"
'விஞ்ஞானிகள் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்'-புத்தகத்திலிருந்து...
ஏழாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை
கோவை மாவட்டம்