கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

வெள்ளி, 31 அக்டோபர், 2014

மூலத்துறை மாணவனின் முத்தான பேச்சை மக்கள் டிவியில் காணத்தவறாதீர்...

கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவனின் "மாநில அளவில் முதல் பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின் நிகழ்ச்சி" 

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

சனி, 13 செப்டம்பர், 2014

கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் கணித மன்றச் செயல்பாடுகள்

கோவை மாவட்டம் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் கணித மன்றச் செயல்பாடுகள் சென்ற வெள்ளியன்று(5-09-2014) நடைபெற்றது. ஏழாம் வகுப்பு மாணவி காவ்யா வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையாசியை பத்திரம்மாள் தலைமை

திங்கள், 8 செப்டம்பர், 2014

திருக்குறளின் சிறப்பு

திருக்குறளின் சிறப்பு

·         திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளனதிருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
·         திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
·         திருக்குறளின் முதல் பெயர்முப்பால்
அஞ்சாத சிறுமி
   சில சிறுமிகள் வீதியோரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வழியாக ஒரு குதிரை வண்டி மிகவும் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தவன் ஒரு ஆங்கிலேயன். அவன் வண்டி ஓட்டுபவனிடம் ,"இன்னும் வேகமாக ஓட்டு. சீக்கிரம் போ" என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தான்.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

எங்கள் பள்ளி மாணவர்களின் படைப்புகள்

 நன்றி மறவாத நல்லவர்
     வ.உ.சி. கோவை சிறையில் இருந்த போது,அவரிடம் பரிவு காட்டி உதவிகள் செய்தவர் சி.கே.சுப்பிரமணிய முதலியார். அவர் நினைவாக வ.உ.சி. தன் மகனுக்கு, சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தார். இதேபோல் மீண்டும் வழக்கறிஞர் தொழில் செய்யத் தமக்கு அனுமதி பெற்றுத் தந்த பிரிட்டிஷ் நீதிபதி வாலஸ் பெயரை நினைவூட்டும் விதமாக,தன் இன்னொரு மகனுக்கு வாலேசுவரன் என்று பெயரிட்டார். 

 "அறிந்த பெயர்கள்..அறியாத தகவல்கள்.." புத்தகத்திலிருந்து 



ர.தமிழ்ச்செல்வி 
ஏழாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை
கோவை மாவட்டம்

சனி, 23 ஆகஸ்ட், 2014

கோவை மண்டல அளவில் நடைபெற்ற திருக்குறள் பேச்சுப்போட்டியில் மூலத்துறை மாணவன் முதலிடம்

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பேச்சுப்போட்டியினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு 10 மையங்களில் பல்வேறு திருக்குறள் தலைப்புகளில் இப்போட்டி நடைபெறும்.ஒரு மையத்திற்கு ஒருவர் வீதம் 10 மாணவர்களை தேர்வு செய்யப்படுவர்.தேர்வு பெற்ற மாணவர்கள்  சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாநில அளவிலான போட்டியில் பங்குபெறுவர்.அங்கு முதல் மூன்று இடங்கள் பெறுவோர் முறையே 10000,7500 மற்றும் 5000 என பரிசுகள் பெறுவர்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொற்றா நோய்கள் விழிப்புணர்வு கண்காட்சி

      கோவை மாவட்டம்,மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் "உடல் நலச் சங்கம்"[HEALTH CLUB]  சார்பாக இதய நோய்கள்,சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் போன்ற தொற்றா நோய்கள் வராதவாறு தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுக் கண்காட்சி நடத்தப்பட்டது. 
      இதில்  மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு...
*சர்க்கரை நோய் விழிப்புணர்வு
*இதயம் காப்போம்
*மூலிகைகளும் அதன் பயன்களும்
*புகை பிடித்தலின் தீமைகள்
*சரிவிகித உணவு
*உணவே மருந்து
*முளை கட்டிய தானியங்களின் மகத்துவம்
*புற்று நோய்-காரணங்களும் தடுக்கும் முறைகளும்
ஆகிய தலைப்புகளில் மனவரைபடங்கள் வரைந்து அவற்றிக்கான விளக்கங்களைத் தொகுத்தனர். இந்த மனவரைபடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடல் நலச் சங்க உறுப்பினர்கள் தாங்கள் வரைந்த மனவரைபடங்களின் துணை கொண்டு கருத்துக்களை விளக்கினர்.

மூலத்துறை பள்ளியில் நடைபெற்ற 68ஆவது சுதந்திர தின கொண்டாட்ட புகைப்படங்கள்