கோவை
மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக மார்ச் 20ஆம்
தேதி “உலக சிட்டுக்குருவிகள்
தினம்” கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் பத்திரம்மாள் தலைமை
வகித்தார். பள்ளியின் பிற ஆசிரியர்கள் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதைப் பற்றி சிற்றுரை
ஆற்றினார்கள்.