கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

புதன், 9 அக்டோபர், 2013

கொடுத்து மகிழ்ந்தோம்...! நன்றியால் நெகிழ்ந்தோம்...!!



எங்கள்  மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 08-10-2013 அன்று  '*கொடுத்து மகிழும் வார விழா'  * எனப்படும் *JOY OF GIVING
WEEK *விழா*  *கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் அளித்த பாக்கெட் மணி [POCKET MONEY] தொகைகளான ரூ.2, ரூ.3 மற்றும் ரூ.5 ஆகியவற்றை சேர்த்து வைத்து பூங்கொத்துகள் மற்றும் பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாங்கி பள்ளியில் பணிபுரியும் தங்களது ஆசிரியர்களுக்கு கொடுத்து வாழ்த்தி மகிழ்ந்தனர்.மேலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு மீத்திறன் பெற்ற
மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் எடுத்து உதவி மகிழ்ந்தனர்.
    கொடுத்தும் உதவியும் மகிழ்ந்த மாணவர்களுக்கு தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் ஆசிரியர்கள் திருமுருகன்,ரவிக்குமார் ஆசிரியைகள் முனியம்மாள், அமுதா,அங்கையற்கண்ணி மற்றும் பிரேமாள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.