கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

கருத்துகளுக்கு தொடர்பு கொள்க :9788334907

வெள்ளி, 19 ஏப்ரல், 2013


கோவை மாவட்டத்தில்சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தொடக்கக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலை இலக்கியப் போட்டிகளில், மாணவர்கள்  வெற்றிபெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா 17-04-2013 அன்று கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (கூடுதல்) திருமதி.திருவளர்செல்வி தலைமை வகித்தார்
   இதில் காரமடை ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ம.சுனில்குமார் (ஊமப்பாளையம் ஊ.ஒ.தொ.பள்ளி),ஜெ.திருமுருகன்,க.ரவிக்குமார் (மூலத்துறை ஊ.ஒ.ந.நி.பள்ளி),ரா.கனகராஜ் (ஆலத்திவச்சினம்பாளையம் ஊ.ஒ.ந.நி.பள்ளி),ம.சிவக்குமார்,ச.சந்தானகிருஷ்ணன் (லிங்காபுரம் ஊ.ஒ.ந.நி.பள்ளி) ஆகியோருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்