அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வி இணைச் செயல்பாடுகளில் திறன்களை
பெறுதல் நோக்கில் தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் பாட வாரியாக மன்றங்கள் அமைத்துச்
செயல்பட உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம்
அருகிலுள்ள, மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (29-11-2013) மாணாக்கர் கணித மன்றம் தொடங்கப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் தலைமை வகித்து
மன்றத்தை தொடங்கி வைத்தார். ஆசிரியை முனியம்மாள் வரவேற்புரை நல்கினார். “பூஜ்ஜியம்
கண்டுபிடிப்பில் இந்தியர்களின் பங்கு” என்ற தலைப்பில் ஆசிரியர் ரவிக்குமார் பேசினார்.
“அன்றாட வாழ்வில் கணிதத்தின் அவசியம்” என்ற தலைப்பில் ஆசிரியைகள் அமுதா, அங்கையற்கண்ணி
மற்றும் பிரேமாள் ஆகியோர் பேசினர்.
‘கணித விநாடி
வினாப் போட்டி’,
‘சொல்லுங்கள்..! வெல்லுங்கள்..!!’,
‘புதிரை விடுவித்தால் நீ புத்திசாலி’
என கணிதம் தொடர்பான பல்வேறு போட்டிகள் மாணவர்களால்
நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி
ஏற்பாடுகளை கணித ஆசிரியர் திருமுருகன் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக